அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment